நபி நேசம்
----------------
பாலையில்
நபிகள் செல்ல
மேலே
நிழலிடும்
மேகமாய் தொடர்வேன்..
சோலையில்
நபிகள் இருக்கப்
புகழ்
சோபனம்
பாடிக் களிப்பேன்
மாலையில்
நபிகள் நடந்தால்,
அவர்களைத்
தாங்கிடும்
பாதணி ஆவேன்
ஏழையாய்
நபிகள் இருக்க
இரங்கி
வடித்திடும்
விழிநீர் ஆவேன்..
போரினில்
நபிகள் செல்ல
ஏந்தும்
வீரப்
போர்வாள் நானாவேன்
நுதலில்
இலங்கிடும் நூரினில்
எழில்மிகு
நபித்துவம்
கண்டுமகிழ்வேன்
பாரினில்
அவர்களைப் பார்த்திடப்
பாவி
எனக்குப்
பாக்கியம் இல்லையே..
நேரினில்
நபிகளைக் கண்டால்
நேசத்தால்
அக்கணமே முத்தமிட்டு
உயிர் துறப்பேன்
00
No comments:
Post a Comment