முத்திரையிடப்பட்ட மது
➖➖➖➖➖➖➖➖
ஏந்தி நிற்கின்றேன்
என் கல்புக் கிண்ணத்தை..
மோகத்தால்
மையல் கொண்டு
தாகத்தால்
தன்னிலை மாறி,
அருந்தும்
வேகத்தால்
வெறி கொண்டு
தீராப் போதையில்
விழிகள் சிவக்க
மாறாக் காதலில்
மயங்கித் தள்ளாட..
நிரப்புங்கள்
என் கல்புக் கிண்ணத்தை
உயர் கஸ்தூரியினால்
முத்திரையிடப்பட்ட
அந்த
முக-மது..
No comments:
Post a Comment