திருப்பாதம் தாங்கி
--------------------
முஹம்மதியப் பேரொளியை
முத்தே முழுமதியே எனப்பதறித்
திருப்பாதம் இரண்டிலும்
முத்தமிட்டு
மூச்சை விட்டு விட துடிக்கிறேன்
கண்மணியே நாயகமே
கண்மணியே நாயகமே
கல்புக்குள் வாழுகிற
காதலரே..எனக்கதறிக்
கால்களில் விழுந்து
கண்ணீரால் கழுவிடப்
பதறுகிறேன்
ரஹ்மத்துல் ஆலமீனே...
ரஹ்மத்துல் ஆலமீனே
ரகசியப் பொக்கிஷமே..தங்கள்
பாதம் தாங்கிப்
பாக்கியம் பெற்ற
பாதரட்சையாய் ஆகிடப்
பரிதவிக்கின்றேன்
புனிதரே எங்கள் பூமானே..
புனிதரே எங்கள் பூமானே
No comments:
Post a Comment